பெண்... குழந்தை... குடும்பம்...
சிறு மங்கை
காலில் கொலுசொலி கிணுகிணுக்க
கைகளில் வளையல்கள் கலகலக்க
தலையில் மல்லிகை மணமணக்க
வந்தாள் அந்த சிறு மங்கை... காதலியா
அல்ல அல்ல என் மகள்
குரல் அல்ல அது குழலும் அல்ல
யாழ் அல்ல அது மீட்டும் வீணையும் அல்ல
தேன்அல்ல அது தீங்கரும்பு சாருமல்ல
என் செல்லத்தின் மழலை மிழற்றல் அது
தெய்வம்
உண்டு என்றால் உண்டு... தெய்வம்
இல்லை என்றால் இல்லை
கண்மூடி நீ சிந்தி... தெய்வம்
உன்னில் நீ காணலாம்
பெண் - அமுதசுரபி
கணவனுக்கு காதல்
சின்ன கண்ணனுக்கு பாசம்
மாமன் மாமிக்கு பண்பு
பெற்ற அன்னை தந்தைக்கு நன்மதிப்பு
உடன் பிறப்புக்கு அன்பு
பெண்ணே நீ கொடுப்பதில் அமுத சுரபி
ஆனால் உனக்கு கிடைப்பதோ...
சிரிப்பு
குழந்தையின் சிரிப்பு மனதை மயக்கும்
தாயின் சிரிப்பு அரவணைக்கும்
தந்தையின் சிரிப்பு உற்சாகமூட்டும்
நண்பனின் சிரிப்பு கவலைகளை நீக்கும்
ஆனால் என்னவளின் சிரிப்போ என்னையே ஆளும்
பரவசம்
வழங்கியபொழுது பரவசமானான்... அவள்
தங்கள் மழலை செல்வத்தை வழங்கிய பொழுது
கண்கலங்கி மெய் சிலிர்த்து நின்றான்... அவள்
தாம் பெற்ற மகளை முதன் முதலில் கைகளில் ஏந்திய பொழுது
காதலாகி அவன் தன்னவளிடத்தில் படித்த கவிதையை ... அவள்
கருவாக தன்னில் சுமந்து பரிசாக அவனிடமெ வழங்கிய பொழுது
பரவசமானான்...
அன்னைமனம் குளிர
ஆடி வரும் தென்றலே...
உன் பட்டு கன்னத்தில் முத்தமிட
ஆவல்கொண்டேன்
உன்னை கையிரண்டில் அள்ளி அணைத்திட
உள்ளம் தவித்தேன்
உன் மழலைசொல் கேட்டு
மதிமயங்கி கிருகிருத்தேன்
இந்த கண்ணாமூச்சி ஏனடா...
உன் அன்னையை ஏங்க வைக்காதேடா...
உன் ஒவ்வொரு அசைவும் கவிதையடி
உன் ஒவ்வொரு மழலையும் யாழிசையடி
உன் ஒவ்வொருஸ்பரிசமும் தென்றல் தீண்டலடி
உன் ஒவ்வொரு சிரிப்பும் கடவுளின் தரிசனமடி
நான் பெற்ற செல்வமே ஆடி வரும் தேனே
நீயும் எனது தாயடி
மீண்டும் எழுவேன்
எழுந்தேன் விழுந்தேன்... மீண்டும் எழவே....
நித்தமும் இந்த போராட்டம்...
வாழ்க்கை ஒரு சுமையா அல்லது சுவையா
நாளும் பொழுதும் பொறுப்புகள் சுமந்து
இரவும் பகலும் அல்லல் பட்டு
விடிவும் காணாது விடையும் கிடைக்காது
திணருகிரேனே... மூச்சு முட்டுகிறதே
இன்றோடு முடிந்தது என எண்ணினேன்
அல்ல அல்ல நாளையும் உண்டு என்றான் படைத்தவன்
அதுவே விதியானால்... அதை மதியால் வெல்வேன்
பீனிக்ஸ் பறவை போல நாளும்
சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்
மீண்டும் விழுந்தேனா... அல்ல எழுந்தேன்...
சில்லு சில்லாக உடைகிறேன்
கண்ணாடி துண்டுகளாக சிதறுகிறேன்
அலையின் மேல் புழுவாக தத்தளிக்கிறேன்
அனல் மேல் மெழுகாக உருகுகிறேன்
நாளும் பொழுதும் தவிக்கிறேன்
வாழ்வில் துன்பம் வரும் என்பர்... அந்த
துன்பமே வாழ்க்கையானால்... தவிப்பு
துடிப்பு அடங்குமா... வாழ்வு மலருமா
நாளும் பொழுதும் நரகமே விடியலாக
காலையும் மாலையும் போராட்டமே வாழ்க்கையாக
துன்பத்தையே சுமந்து இதயம் வெடிக்கிறது
கண்ணீரையே சுமந்து கண்கள் தவிக்கின்றது
கல்லாக பாரம் மனதில் சுமையாக அழுத்துகிறது
வருமோ விடியல் விலகுமோ கரு மேகம்
என்உயிரே
என் மணி வயிற்றில் பிறந்த மகளே
என் உதிரம் வார்த்து செய்த சந்தனசிலையே
என் கருவில் உதித்த மலரே
என் தாயாக என்னை போற்ற வந்தவளே
என் சேயாககையில் தூங்கும் நிலவே
உன் தளிர் வாய் முத்தம் போதுமடி தங்கமே
வானமும் வசப்படும்
மறவாதே கண்ணே
என் கண்ணின் மணியே
உன் செம்பவள வாய் அமுதூட்டியவளை
உன் மழலை ராகத்தை ரசித்தவளை
உன் முதலடி வைத்த பாதத்தை முத்தமிட்டவளை
நீ ஆடி திரிந்துபாடி மகிழ்ந்ததை சுகித்தவளை
அழகிய மொட்டு மலரானதை கண்டு பிரமித்தவளை
இதோ இன்று தன் இதயத்தின் ஒரு பாகமான உன்னை
மற்றொருவனுக்கு தாரை வார்த்துகொடுத்தவளை
உன் ஆருயிர் அன்னையை மறவாதே கண்ணே
பொக்கிஷம்
பொக்கிஷமாக பாதுகாத்தேன்
தோழிகளுடன் கூட்டாஞ்சோறு ஆக்கியதையும்
அன்னை தந்தை உடன்பிறப்புடன்
நிலாச்சோறு உண்டதையும்
கல்லூரி நாட்களில்பகிர்ந்துண்டதையும்
மீண்டும் வருமோ அப்பொற்காலம்
மீளுமோ அவ்வின்பம்
தாலாட்டு
பச்சைகிளியோ என பேசும்
பொற்சித்திரமே
தளிர் நடையிடும்
நந்தவனமே
பூங்காற்றாய் பாடிச் செல்லும்
பூங்குயிலே
என்சின்னவளே
என் செல்வமகளே
ஆறீராரோ நான் பாடிடவெ
நீயும் கண்ணுறங்கு மகளே
பெண் எனும் சக்தி
பறந்துவிரிந்து இருக்கிறேன்
பலதும் பேசி அலசி இருக்கிறேன்
சிரித்து சலித்துகோபித்து
மகிழ்வித்து இருக்கிறேன்
ஆடி பாடி வரைந்து சமைத்து
எழுதிஇசைத்து பேசி சோபித்து இருக்கிறேன்
அமைதியாக காணப்படும் நான்
ஆழ்கடல்முத்துக்கள் நிறைந்தவள்
அள்ள அள்ள குறையாத செல்வங்களை கொண்டவள்
நான் பெண்மை எனும் மகா சக்தி
தினம்பூத்திடுவோம் புது மலராய்
மலர்ந்து மணம் பரப்புவோம் பார் எங்கும்
பலவண்ணங்களாக உறவுகள் கொண்டு
பல வாசம் போல குணம் படைத்து
வாழ்க்கை எனும்தோட்டத்தில்
என்றென்றும் மலர்ந்து சிரித்திடுவோம்
நட்பை மறவேன்
தோளோடு தோள் சேர நடந்ததை
ஒரே தட்டில் தின்ற சோற்றை
மற்றவரைபார்த்து எழுதிய தேர்வுகளை
நீ போட்டுவிட்ட சட்டை பித்தானை
நான் கடித்துகொடுத்த மிட்டாயை
நீ எனக்காக வாங்கிய அடிகளை
நான் உனக்காக இட்ட மண்டிகளை
பொம்மையை கட்டிப் பிடித்து உறங்குது
தாயில்லா சின்னக்குழந்தை
வைக்கோல் கன்றை தீண்டி சுகம் காணுது
கன்றை இழந்த பசு
நீயே தெய்வமாக இருக்கிறாய்
எனக்கு அமுதூட்டிய என் அன்னையே
என்னை மனதனாக்கியஎன் தேவதையே
என்னை சீராட்டி பாராட்டி வளர்த்த என் அன்பு பெட்டகமே
என்றேன்றும்என் மனதில் நீயே
நீங்கா இடம் பெற்றிருப்பாய் என் தாயே
உன் குறும்பால் என் மனதை கொள்ளை கொண்டாய்
உன் மழலையால் எங்களை இன்புறச்செய்தாய்
உன் களிப்பால் எங்கள் கலிதீர்த்தாய்
கண் முன்னே ஆடி வரும் கண்ணா
கண்ணின் மணிவண்ணா
அவளே..
என் செல்ல பொக்கிஷமும் அவளே
சில நேரம் என் அன்னையும் அவளே
சீண்டிசிரிக்கவைக்கும் தோழியும் அவளே
கண்டித்து திட்ட வைக்கும் குறும்பு சகோதரியும்அவளே
பொங்கி சிரிக்கும் கடல் அலை போல சிரிக்கும் சித்திரமும் அவளே
என் அன்புதங்கையே சின்னவளே
அகிலத்தை அன்பால் அணைத்தவள் பெண்
உலகத்தை தன் தனி சிறப்பால் ஆட்சி செய்பவள் பெண்
உலகம்என்னும் குழந்தையை அன்னையாய்
பெற்றெடுத்து வளர்த்தியவள் பெண்
இவ்வையகத்தில் அவளில்லாமல் அணுவும் அசையாது
பெண் மஹா சக்தி...
அன்னையாய் சகோதரியாய் தோழியாய்
மந்திரியாய் நல்லாசிரியராய்மனைவியாய்
அவள் எடுக்கும் அவதாரங்கள் பலப் பல
பிள்ளையை ஏந்தி பாலூட்டிசீராட்டி வளர்ப்பது மட்டுமல்ல
எழுதுகோலையும் கணினியையும் கைப்பற்றி
சாதனைபடைக்கவும் அவளுக்குத் தெரியும்
வாள் ஏந்த தயங்கியதில்லை
வாய் சொற்கள்பயன்படாத போது.
அஞ்சா நெஞ்சுடன் போர் கொள்ள
தடுமாறியதில்லைதேவைப்படும்போது
சில நிர்பயாக்களால் பயந்தவள் அல்ல அவள்
பல ஆயிரக் கணக்கானபெண்களை காக்க
கவசம் பூண்டவள்
பூண்டோடு அழிக்க சக்தி கொண்டு
வீறுநடைபோடுபவள்
அன்பால் அவளை வீழ்த்த முடியும்
மனதால் பூஞ்சையானவள் தான்
ஆனால்வஞ்சகத்தை தாங்கி
மெளனமாக இருப்பவள் அல்ல
அன்பால் பண்பாக துணை நில்மானிடனே
முன்னேறி உன்னையும் முன்னேற்றுவாள்
அடிமை படுத்த நினைக்காதே மாய்ந்துபோவாய்
பயணம் செய் பெண்ணே
அஞ்சாமல் பயணம் செய்
இனி பெண் வாழ்வு மலரும்
எனநம்பிக்கையுடன் செல்
இனி நீ தனி அல்ல
நீயே ஒரு மகா சைனியம் என
திண்மையான எண்ணத்துடன் முன்னேறு
கண்ணேமணியே மரகதமே கற்கண்டே
என சீராட்டி வளர்த்தேனே
அன்னையாக போற்றி பாடிடவேண்டாம்
மாதுவாக மதிக்க கூட மறந்தாயோ மகனே
உன் வீட்டில் ஒரு இடம் இல்லை எனினும்
உன் மனதிலாவது ஒரு துளி இடம் கொடுப்பாயா மகனே
தாய் பாலிற்கு கணக்குபோடவில்லை
ஒரு அன்பு சொல்லிற்கு ஏங்குகிறேன்
பொல்லாத உலகம் இது
தங்கத்தையும் உரசி பார்க்கச் சொல்லும்
சீதையையும் தீகுளித்து வரச் செய்யும்
வாழ்ந்தாலும் பேசும்
தாழ்ந்தாலும் இகழும்
சிரித்தாலும் அழ வைக்கும்
அழுதாலும் சிரித்து கேலி பேசும்
அந்த ஆண்டவனையே விலைபேசும்
என் தோள்களில் உறவாடி
என் கை பிடித்து பள்ளிக்குச் சென்று
என் கூட சரிசமமாக அமர்ந்து சண்டையிட்ட
என் பெண் செல்வம்
இன்று என் மடியில் அமர்ந்து
இன்னொருவன் சொத்தாகிவிட்டாள்
அவன் கைபிடித்தே ஏழடி நடந்துவிட்டாள்
என்னை தனியாக்கிவிட்டு சென்றேவிட்டாள்
நடப்பேன் நிமிர்ந்து நன்னடையுடன்
நேர்கொண்ட பார்வையுடன்
தெளிந்தசிந்தனையுடன்
திண்ணமான எண்ணத்துடன்
நீ இல்லாவிடினும் என்னுடன்
வாழ்ந்தே காட்டுவேன் துணிவுடன்
பகடை காயயை சகுனி உருட்ட பாஞ்சாலி மானம் அழிந்தது
பகடையாக இராவணன் கவர்ந்த சீதைமானம் தவித்தது
பகடையாக அக்காலம் தொட்டு இக்காலம் வரை பெண்குலம் தவிக்கிறது
பகடையாக ஆகாமல் காப்பாற்றிக்கொள்ள தினம் பெண்கள் போராட்டம் தொடர்கிறது
அன்னையின் ஈடில்லா அன்பு
தந்தையின் கண்டிப்பான அன்பு
சகோதரனின் பாசமானஅன்பு
காதலனின் வெறித்தனமான அன்பு
குழந்தையின் வெகுளியானஅன்பு
பெண்ணிற்குதான் எத்தனை அன்பின் பரிமாணங்கள்
அத்தனையும் அவள் பாதுகாக்கும் பொக்கிஷங்கள்
சுகம்
அன்னையின் மடி சுகம்
தந்தையின் தோள் சுகம்
கைபிடித்தவனின் காதல் மொழிசுகம்
கிள்ளை மொழி பேசும்
பிள்ளையின் மழலை சுகம்
மழை நேர ஈரக்காற்றுசுகம்
பாதத்தை தீண்டும் பனிபுல்லும் சுகம்
குயிலின் கீதமும் சுகம்
கன்றினைவருடும் ஆவின் குரலும் சுகம்
மலரின் மணமும் சுகம்
ஒலி எழுப்பி அதிகாலை முழங்கி
என்னை துயில் எழுப்பி விட்டதம்மா
கன்றும்பசுவும் ஒரு முகமாக
கொஞ்சும் நேரமம்மா
பறவைகள் வானில் கீச்சிட
வண்டுகள்பூக்களில் ரீங்காரமிட
வாயிலில் தெளித்த சாண நீரும்
அதன் மீது வளைந்தகோலப்பொடியும்
நடுவே சட்டமாக வந்தமர்ந்த பூசணிபூவும்
பையன் வீச்சில் வந்துவிழுந்த நாளிதழும்
அடுப்பில் மணத்த அம்மா கைபக்குவமும்
மனதை நிறைக்கும் நேரமம்மா
பொல்லாத உலகம்
அவனவன் முதுகில் ஆயிரம் அழுக்கு
பேசுவதென்னவோ மற்றவர்வழக்கு
தோல்விகண்டு அழுதாலும் சிரிக்கும்
வெற்றிகண்டு சிரித்தாலும்ஏசும்
தாம் வாழ சிரமிப்பதில்லை
பிறர் வாழ பொறுப்பதில்லை
கட்டி வைக்கிறாய்
பெண்ணாக பிறந்தாய்
வாயை திறவாதே
என கட்டி வைக்கிறாய்
அங்கிங்கு செல்லாதே
என அடக்கி வைக்கிறாய்
படித்தது போதும்
என என்அறிவு பசியை
கிள்ளி வைக்கிறாய்
பிடித்தம் இல்லையெனினும்
கண்டவனை கட்டிவைக்கிறாய்
எனக்கென ஒரு வாழ்க்கை
எனக்கென ஒரு ஆசை இன்றியே
அடக்கிஆள்கிறாய்
பெற்றோர் என்பதால்
தலை வணங்கியே ஏற்றுக்கொள்கிறேன்
ஆயினும் என்தனித்துவத்தை
விலை குடுக்க மாட்டேன்
கவிதை எண்ணங்களின் பிரவாகம்
ஆழ் மனதின் வெளிப்பாடு
கருத்துகளின் வண்ணத்தொகுப்பு
ஆசைகளின் பிரதிபலிப்பு
கனவுகள் கற்பனைகளின் அணிவகுப்பு
இருக்கும்வரைஒன்றின் அருமை தெரியாது
கையில் இருக்கும் பொக்கிஷத்தின் பெருமை புரியாது
இழந்தபின் அதனை எண்ணி மனம் கலங்குது
இனி வருமா கை சேருமா என நெஞ்சம் துடிக்குது
எதை தேடி ஓடினேன்
எதை கண்டு களித்தேன்
இதைத்தானா நாடினேன்
என என்னை நானேகேட்கிறேன்
கைக்கு கிட்டும்வரை பதட்டம்
கிடைத்தபின் அதன் மீதுநாட்டம்
இவ்வளவுதான இது
என ஒரு நாள் அதுவும் திகட்டும்
வாழ்வின் பொருள் இதல்லாது வேறேது
அம்மா
என்னை பெற்று சீராட்டி பாலூட்டி வளர்த்தாள்
என் விரல் பிடித்து எழுதவைத்தாள்
என் கை பிடித்து பள்ளியில் சேர்த்தாள்
நல்லது பல கூறினாள்
குமரியாக நான் வளர
நற்பண்புகளை என்னுள்வளர்த்தாள்
கைக்கு கையாக காலுக்கு காலாக நின்றாள்
மனதிற்கு உறுதுணையாகவிளங்கினாள்
மனோதிடத்தை வளர்த்தாள்
சுயமாக நிற்க வைத்தாள்
நான் வெல்ல தான்ஜெயித்தாள்
நல்ல பெண்மணியாக உருவாக்கினாள்
அவளைப் போன்ற பிரதிரூபமாகஎன்னை மாற்றினாள்
இனி நான் வெல்வேன் சாதிப்பேன் என திண்ணமானாள்
என்னைபிரிந்து சென்றாள்- உடலளவில்
இதோ என் கண் முன்னே
இதோ என்மனதினுள்ளே
இன்றும் வாழ்கிறாள்
மகளே... மருமகளே...
நான் பெண்ணாகப் பிறந்தேன்
மகளாக வளர்ந்தேன்
சகோதரியாக உருபெற்றேன்
என்னுள்ளும் தாய்மையை வளர்த்தேன்
அதை பறிமாற யாருமில்லையே என வருந்தினேன்
என்னை தாயாக்க வந்தாய்
என் ஜீவனாகப் பிறந்தாய்
என் கருவில் ஜனிக்கவில்லை
என் மனதில் பிள்ளைக் கனியாக ஜனித்தாய்
என் மார்பிலும் தோளிலும் வளர்ந்தாய்
வறண்ட பாலைவனமாக இருந்தேன்
என்னில் சோலைவனத்தை உருவாக்கினாய்
காய்ந்த பயிராக என் உணர்வுகள் வாடி இருந்தேன்
உன் அன்பெனும் நீர் ஊற்றி என்னை துளிர்விடச் செய்தாய்
உன் ஸ்பரிசத்தில் நான் என்னை மறந்தேன்
உன் மழலையில் என்னை தொலைத்தேன்
உன் தளிர் நடையில் உயிர்த்தேன்
உனக்கு அமுதூட்டி பசியாறினேன்
உன்னை உறங்க வைத்து தாலாட்டினேன்
உன் பொக்கை வாய் சிரிப்பில் இறைவனை கண்டேன்
உன் அணைப்பில் என் அன்னையை உணர்ந்தேன்
அத்தைமடி மெத்தையாக
உனக்கு மற்றுமொருதாயாக
காத்து நிற்பேன்
என் மகளே மருமகளே
என்னை ஆளப்பிறந்தவளே
என் உயிரில் கலந்த கருவே
என் வாழ்வின் உயிர்த்தீ நீயடி.
மீண்டு வா மகனே
மீண்டும் வா
மரணத்தின் வாசலில்
நாட்டின் துயர் போக்க
மக்களின் உயிர் காக்க
என்னை துறந்து காவல் நிற்க
சென்றவனே என் மகனே
என்று வருவாயோ
வரவேதான் மாட்டாயோ
என கலங்கி அழுத விழிகளுடன்
ஆயிரம் கண்ணுடன்
வாயிலை பார்த்து நிற்கிறேன்
தாய்நாட்டின் கடமை முடிந்தபின்
இந்த தாயின் கடமை காக்க சீக்கிரம் வா...
சிறு மங்கை
காலில் கொலுசொலி கிணுகிணுக்க
கைகளில் வளையல்கள் கலகலக்க
தலையில் மல்லிகை மணமணக்க
வந்தாள் அந்த சிறு மங்கை... காதலியா
அல்ல அல்ல என் மகள்
குரல் அல்ல அது குழலும் அல்ல
யாழ் அல்ல அது மீட்டும் வீணையும் அல்ல
தேன்அல்ல அது தீங்கரும்பு சாருமல்ல
என் செல்லத்தின் மழலை மிழற்றல் அது
தெய்வம்
உண்டு என்றால் உண்டு... தெய்வம்
இல்லை என்றால் இல்லை
கண்மூடி நீ சிந்தி... தெய்வம்
உன்னில் நீ காணலாம்
பெண் - அமுதசுரபி
கணவனுக்கு காதல்
சின்ன கண்ணனுக்கு பாசம்
மாமன் மாமிக்கு பண்பு
பெற்ற அன்னை தந்தைக்கு நன்மதிப்பு
உடன் பிறப்புக்கு அன்பு
பெண்ணே நீ கொடுப்பதில் அமுத சுரபி
ஆனால் உனக்கு கிடைப்பதோ...
சிரிப்பு
குழந்தையின் சிரிப்பு மனதை மயக்கும்
தாயின் சிரிப்பு அரவணைக்கும்
தந்தையின் சிரிப்பு உற்சாகமூட்டும்
நண்பனின் சிரிப்பு கவலைகளை நீக்கும்
ஆனால் என்னவளின் சிரிப்போ என்னையே ஆளும்
பரவசம்
வழங்கியபொழுது பரவசமானான்... அவள்
தங்கள் மழலை செல்வத்தை வழங்கிய பொழுது
கண்கலங்கி மெய் சிலிர்த்து நின்றான்... அவள்
தாம் பெற்ற மகளை முதன் முதலில் கைகளில் ஏந்திய பொழுது
காதலாகி அவன் தன்னவளிடத்தில் படித்த கவிதையை ... அவள்
கருவாக தன்னில் சுமந்து பரிசாக அவனிடமெ வழங்கிய பொழுது
பரவசமானான்...
அன்னைமனம் குளிர
ஆடி வரும் தென்றலே...
உன் பட்டு கன்னத்தில் முத்தமிட
ஆவல்கொண்டேன்
உன்னை கையிரண்டில் அள்ளி அணைத்திட
உள்ளம் தவித்தேன்
உன் மழலைசொல் கேட்டு
மதிமயங்கி கிருகிருத்தேன்
இந்த கண்ணாமூச்சி ஏனடா...
உன் அன்னையை ஏங்க வைக்காதேடா...
உன் ஒவ்வொரு அசைவும் கவிதையடி
உன் ஒவ்வொரு மழலையும் யாழிசையடி
உன் ஒவ்வொருஸ்பரிசமும் தென்றல் தீண்டலடி
உன் ஒவ்வொரு சிரிப்பும் கடவுளின் தரிசனமடி
நான் பெற்ற செல்வமே ஆடி வரும் தேனே
நீயும் எனது தாயடி
மீண்டும் எழுவேன்
எழுந்தேன் விழுந்தேன்... மீண்டும் எழவே....
நித்தமும் இந்த போராட்டம்...
வாழ்க்கை ஒரு சுமையா அல்லது சுவையா
நாளும் பொழுதும் பொறுப்புகள் சுமந்து
இரவும் பகலும் அல்லல் பட்டு
விடிவும் காணாது விடையும் கிடைக்காது
திணருகிரேனே... மூச்சு முட்டுகிறதே
இன்றோடு முடிந்தது என எண்ணினேன்
அல்ல அல்ல நாளையும் உண்டு என்றான் படைத்தவன்
அதுவே விதியானால்... அதை மதியால் வெல்வேன்
பீனிக்ஸ் பறவை போல நாளும்
சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்
மீண்டும் விழுந்தேனா... அல்ல எழுந்தேன்...
சில்லு சில்லாக உடைகிறேன்
கண்ணாடி துண்டுகளாக சிதறுகிறேன்
அலையின் மேல் புழுவாக தத்தளிக்கிறேன்
அனல் மேல் மெழுகாக உருகுகிறேன்
நாளும் பொழுதும் தவிக்கிறேன்
வாழ்வில் துன்பம் வரும் என்பர்... அந்த
துன்பமே வாழ்க்கையானால்... தவிப்பு
துடிப்பு அடங்குமா... வாழ்வு மலருமா
நாளும் பொழுதும் நரகமே விடியலாக
காலையும் மாலையும் போராட்டமே வாழ்க்கையாக
துன்பத்தையே சுமந்து இதயம் வெடிக்கிறது
கண்ணீரையே சுமந்து கண்கள் தவிக்கின்றது
கல்லாக பாரம் மனதில் சுமையாக அழுத்துகிறது
வருமோ விடியல் விலகுமோ கரு மேகம்
என்உயிரே
என் மணி வயிற்றில் பிறந்த மகளே
என் உதிரம் வார்த்து செய்த சந்தனசிலையே
என் கருவில் உதித்த மலரே
என் தாயாக என்னை போற்ற வந்தவளே
என் சேயாககையில் தூங்கும் நிலவே
உன் தளிர் வாய் முத்தம் போதுமடி தங்கமே
வானமும் வசப்படும்
மறவாதே கண்ணே
என் கண்ணின் மணியே
உன் செம்பவள வாய் அமுதூட்டியவளை
உன் மழலை ராகத்தை ரசித்தவளை
உன் முதலடி வைத்த பாதத்தை முத்தமிட்டவளை
நீ ஆடி திரிந்துபாடி மகிழ்ந்ததை சுகித்தவளை
அழகிய மொட்டு மலரானதை கண்டு பிரமித்தவளை
இதோ இன்று தன் இதயத்தின் ஒரு பாகமான உன்னை
மற்றொருவனுக்கு தாரை வார்த்துகொடுத்தவளை
உன் ஆருயிர் அன்னையை மறவாதே கண்ணே
பொக்கிஷம்
பொக்கிஷமாக பாதுகாத்தேன்
தோழிகளுடன் கூட்டாஞ்சோறு ஆக்கியதையும்
அன்னை தந்தை உடன்பிறப்புடன்
நிலாச்சோறு உண்டதையும்
கல்லூரி நாட்களில்பகிர்ந்துண்டதையும்
மீண்டும் வருமோ அப்பொற்காலம்
மீளுமோ அவ்வின்பம்
தாலாட்டு
பச்சைகிளியோ என பேசும்
பொற்சித்திரமே
தளிர் நடையிடும்
நந்தவனமே
பூங்காற்றாய் பாடிச் செல்லும்
பூங்குயிலே
என்சின்னவளே
என் செல்வமகளே
ஆறீராரோ நான் பாடிடவெ
நீயும் கண்ணுறங்கு மகளே
பெண் எனும் சக்தி
பறந்துவிரிந்து இருக்கிறேன்
பலதும் பேசி அலசி இருக்கிறேன்
சிரித்து சலித்துகோபித்து
மகிழ்வித்து இருக்கிறேன்
ஆடி பாடி வரைந்து சமைத்து
எழுதிஇசைத்து பேசி சோபித்து இருக்கிறேன்
அமைதியாக காணப்படும் நான்
ஆழ்கடல்முத்துக்கள் நிறைந்தவள்
அள்ள அள்ள குறையாத செல்வங்களை கொண்டவள்
நான் பெண்மை எனும் மகா சக்தி
தினம்பூத்திடுவோம் புது மலராய்
மலர்ந்து மணம் பரப்புவோம் பார் எங்கும்
பலவண்ணங்களாக உறவுகள் கொண்டு
பல வாசம் போல குணம் படைத்து
வாழ்க்கை எனும்தோட்டத்தில்
என்றென்றும் மலர்ந்து சிரித்திடுவோம்
நட்பை மறவேன்
தோளோடு தோள் சேர நடந்ததை
ஒரே தட்டில் தின்ற சோற்றை
மற்றவரைபார்த்து எழுதிய தேர்வுகளை
நீ போட்டுவிட்ட சட்டை பித்தானை
நான் கடித்துகொடுத்த மிட்டாயை
நீ எனக்காக வாங்கிய அடிகளை
நான் உனக்காக இட்ட மண்டிகளை
பொம்மையை கட்டிப் பிடித்து உறங்குது
தாயில்லா சின்னக்குழந்தை
வைக்கோல் கன்றை தீண்டி சுகம் காணுது
கன்றை இழந்த பசு
நீயே தெய்வமாக இருக்கிறாய்
எனக்கு அமுதூட்டிய என் அன்னையே
என்னை மனதனாக்கியஎன் தேவதையே
என்னை சீராட்டி பாராட்டி வளர்த்த என் அன்பு பெட்டகமே
என்றேன்றும்என் மனதில் நீயே
நீங்கா இடம் பெற்றிருப்பாய் என் தாயே
உன் குறும்பால் என் மனதை கொள்ளை கொண்டாய்
உன் மழலையால் எங்களை இன்புறச்செய்தாய்
உன் களிப்பால் எங்கள் கலிதீர்த்தாய்
கண் முன்னே ஆடி வரும் கண்ணா
கண்ணின் மணிவண்ணா
அவளே..
என் செல்ல பொக்கிஷமும் அவளே
சில நேரம் என் அன்னையும் அவளே
சீண்டிசிரிக்கவைக்கும் தோழியும் அவளே
கண்டித்து திட்ட வைக்கும் குறும்பு சகோதரியும்அவளே
பொங்கி சிரிக்கும் கடல் அலை போல சிரிக்கும் சித்திரமும் அவளே
என் அன்புதங்கையே சின்னவளே
அகிலத்தை அன்பால் அணைத்தவள் பெண்
உலகத்தை தன் தனி சிறப்பால் ஆட்சி செய்பவள் பெண்
உலகம்என்னும் குழந்தையை அன்னையாய்
பெற்றெடுத்து வளர்த்தியவள் பெண்
இவ்வையகத்தில் அவளில்லாமல் அணுவும் அசையாது
பெண் மஹா சக்தி...
அன்னையாய் சகோதரியாய் தோழியாய்
மந்திரியாய் நல்லாசிரியராய்மனைவியாய்
அவள் எடுக்கும் அவதாரங்கள் பலப் பல
பிள்ளையை ஏந்தி பாலூட்டிசீராட்டி வளர்ப்பது மட்டுமல்ல
எழுதுகோலையும் கணினியையும் கைப்பற்றி
சாதனைபடைக்கவும் அவளுக்குத் தெரியும்
வாள் ஏந்த தயங்கியதில்லை
வாய் சொற்கள்பயன்படாத போது.
அஞ்சா நெஞ்சுடன் போர் கொள்ள
தடுமாறியதில்லைதேவைப்படும்போது
சில நிர்பயாக்களால் பயந்தவள் அல்ல அவள்
பல ஆயிரக் கணக்கானபெண்களை காக்க
கவசம் பூண்டவள்
பூண்டோடு அழிக்க சக்தி கொண்டு
வீறுநடைபோடுபவள்
அன்பால் அவளை வீழ்த்த முடியும்
மனதால் பூஞ்சையானவள் தான்
ஆனால்வஞ்சகத்தை தாங்கி
மெளனமாக இருப்பவள் அல்ல
அன்பால் பண்பாக துணை நில்மானிடனே
முன்னேறி உன்னையும் முன்னேற்றுவாள்
அடிமை படுத்த நினைக்காதே மாய்ந்துபோவாய்
பயணம் செய் பெண்ணே
அஞ்சாமல் பயணம் செய்
இனி பெண் வாழ்வு மலரும்
எனநம்பிக்கையுடன் செல்
இனி நீ தனி அல்ல
நீயே ஒரு மகா சைனியம் என
திண்மையான எண்ணத்துடன் முன்னேறு
கண்ணேமணியே மரகதமே கற்கண்டே
என சீராட்டி வளர்த்தேனே
அன்னையாக போற்றி பாடிடவேண்டாம்
மாதுவாக மதிக்க கூட மறந்தாயோ மகனே
உன் வீட்டில் ஒரு இடம் இல்லை எனினும்
உன் மனதிலாவது ஒரு துளி இடம் கொடுப்பாயா மகனே
தாய் பாலிற்கு கணக்குபோடவில்லை
ஒரு அன்பு சொல்லிற்கு ஏங்குகிறேன்
பொல்லாத உலகம் இது
தங்கத்தையும் உரசி பார்க்கச் சொல்லும்
சீதையையும் தீகுளித்து வரச் செய்யும்
வாழ்ந்தாலும் பேசும்
தாழ்ந்தாலும் இகழும்
சிரித்தாலும் அழ வைக்கும்
அழுதாலும் சிரித்து கேலி பேசும்
அந்த ஆண்டவனையே விலைபேசும்
என் தோள்களில் உறவாடி
என் கை பிடித்து பள்ளிக்குச் சென்று
என் கூட சரிசமமாக அமர்ந்து சண்டையிட்ட
என் பெண் செல்வம்
இன்று என் மடியில் அமர்ந்து
இன்னொருவன் சொத்தாகிவிட்டாள்
அவன் கைபிடித்தே ஏழடி நடந்துவிட்டாள்
என்னை தனியாக்கிவிட்டு சென்றேவிட்டாள்
நடப்பேன் நிமிர்ந்து நன்னடையுடன்
நேர்கொண்ட பார்வையுடன்
தெளிந்தசிந்தனையுடன்
திண்ணமான எண்ணத்துடன்
நீ இல்லாவிடினும் என்னுடன்
வாழ்ந்தே காட்டுவேன் துணிவுடன்
பகடை காயயை சகுனி உருட்ட பாஞ்சாலி மானம் அழிந்தது
பகடையாக இராவணன் கவர்ந்த சீதைமானம் தவித்தது
பகடையாக அக்காலம் தொட்டு இக்காலம் வரை பெண்குலம் தவிக்கிறது
பகடையாக ஆகாமல் காப்பாற்றிக்கொள்ள தினம் பெண்கள் போராட்டம் தொடர்கிறது
அன்னையின் ஈடில்லா அன்பு
தந்தையின் கண்டிப்பான அன்பு
சகோதரனின் பாசமானஅன்பு
காதலனின் வெறித்தனமான அன்பு
குழந்தையின் வெகுளியானஅன்பு
பெண்ணிற்குதான் எத்தனை அன்பின் பரிமாணங்கள்
அத்தனையும் அவள் பாதுகாக்கும் பொக்கிஷங்கள்
சுகம்
அன்னையின் மடி சுகம்
தந்தையின் தோள் சுகம்
கைபிடித்தவனின் காதல் மொழிசுகம்
கிள்ளை மொழி பேசும்
பிள்ளையின் மழலை சுகம்
மழை நேர ஈரக்காற்றுசுகம்
பாதத்தை தீண்டும் பனிபுல்லும் சுகம்
குயிலின் கீதமும் சுகம்
கன்றினைவருடும் ஆவின் குரலும் சுகம்
மலரின் மணமும் சுகம்
ஒலி எழுப்பி அதிகாலை முழங்கி
என்னை துயில் எழுப்பி விட்டதம்மா
கன்றும்பசுவும் ஒரு முகமாக
கொஞ்சும் நேரமம்மா
பறவைகள் வானில் கீச்சிட
வண்டுகள்பூக்களில் ரீங்காரமிட
வாயிலில் தெளித்த சாண நீரும்
அதன் மீது வளைந்தகோலப்பொடியும்
நடுவே சட்டமாக வந்தமர்ந்த பூசணிபூவும்
பையன் வீச்சில் வந்துவிழுந்த நாளிதழும்
அடுப்பில் மணத்த அம்மா கைபக்குவமும்
மனதை நிறைக்கும் நேரமம்மா
பொல்லாத உலகம்
அவனவன் முதுகில் ஆயிரம் அழுக்கு
பேசுவதென்னவோ மற்றவர்வழக்கு
தோல்விகண்டு அழுதாலும் சிரிக்கும்
வெற்றிகண்டு சிரித்தாலும்ஏசும்
தாம் வாழ சிரமிப்பதில்லை
பிறர் வாழ பொறுப்பதில்லை
கட்டி வைக்கிறாய்
பெண்ணாக பிறந்தாய்
வாயை திறவாதே
என கட்டி வைக்கிறாய்
அங்கிங்கு செல்லாதே
என அடக்கி வைக்கிறாய்
படித்தது போதும்
என என்அறிவு பசியை
கிள்ளி வைக்கிறாய்
பிடித்தம் இல்லையெனினும்
கண்டவனை கட்டிவைக்கிறாய்
எனக்கென ஒரு வாழ்க்கை
எனக்கென ஒரு ஆசை இன்றியே
அடக்கிஆள்கிறாய்
பெற்றோர் என்பதால்
தலை வணங்கியே ஏற்றுக்கொள்கிறேன்
ஆயினும் என்தனித்துவத்தை
விலை குடுக்க மாட்டேன்
கவிதை எண்ணங்களின் பிரவாகம்
ஆழ் மனதின் வெளிப்பாடு
கருத்துகளின் வண்ணத்தொகுப்பு
ஆசைகளின் பிரதிபலிப்பு
கனவுகள் கற்பனைகளின் அணிவகுப்பு
இருக்கும்வரைஒன்றின் அருமை தெரியாது
கையில் இருக்கும் பொக்கிஷத்தின் பெருமை புரியாது
இழந்தபின் அதனை எண்ணி மனம் கலங்குது
இனி வருமா கை சேருமா என நெஞ்சம் துடிக்குது
எதை தேடி ஓடினேன்
எதை கண்டு களித்தேன்
இதைத்தானா நாடினேன்
என என்னை நானேகேட்கிறேன்
கைக்கு கிட்டும்வரை பதட்டம்
கிடைத்தபின் அதன் மீதுநாட்டம்
இவ்வளவுதான இது
என ஒரு நாள் அதுவும் திகட்டும்
வாழ்வின் பொருள் இதல்லாது வேறேது
அம்மா
என்னை பெற்று சீராட்டி பாலூட்டி வளர்த்தாள்
என் விரல் பிடித்து எழுதவைத்தாள்
என் கை பிடித்து பள்ளியில் சேர்த்தாள்
நல்லது பல கூறினாள்
குமரியாக நான் வளர
நற்பண்புகளை என்னுள்வளர்த்தாள்
கைக்கு கையாக காலுக்கு காலாக நின்றாள்
மனதிற்கு உறுதுணையாகவிளங்கினாள்
மனோதிடத்தை வளர்த்தாள்
சுயமாக நிற்க வைத்தாள்
நான் வெல்ல தான்ஜெயித்தாள்
நல்ல பெண்மணியாக உருவாக்கினாள்
அவளைப் போன்ற பிரதிரூபமாகஎன்னை மாற்றினாள்
இனி நான் வெல்வேன் சாதிப்பேன் என திண்ணமானாள்
என்னைபிரிந்து சென்றாள்- உடலளவில்
இதோ என் கண் முன்னே
இதோ என்மனதினுள்ளே
இன்றும் வாழ்கிறாள்
மகளே... மருமகளே...
நான் பெண்ணாகப் பிறந்தேன்
மகளாக வளர்ந்தேன்
சகோதரியாக உருபெற்றேன்
என்னுள்ளும் தாய்மையை வளர்த்தேன்
அதை பறிமாற யாருமில்லையே என வருந்தினேன்
என்னை தாயாக்க வந்தாய்
என் ஜீவனாகப் பிறந்தாய்
என் கருவில் ஜனிக்கவில்லை
என் மனதில் பிள்ளைக் கனியாக ஜனித்தாய்
என் மார்பிலும் தோளிலும் வளர்ந்தாய்
வறண்ட பாலைவனமாக இருந்தேன்
என்னில் சோலைவனத்தை உருவாக்கினாய்
காய்ந்த பயிராக என் உணர்வுகள் வாடி இருந்தேன்
உன் அன்பெனும் நீர் ஊற்றி என்னை துளிர்விடச் செய்தாய்
உன் ஸ்பரிசத்தில் நான் என்னை மறந்தேன்
உன் மழலையில் என்னை தொலைத்தேன்
உன் தளிர் நடையில் உயிர்த்தேன்
உனக்கு அமுதூட்டி பசியாறினேன்
உன்னை உறங்க வைத்து தாலாட்டினேன்
உன் பொக்கை வாய் சிரிப்பில் இறைவனை கண்டேன்
உன் அணைப்பில் என் அன்னையை உணர்ந்தேன்
அத்தைமடி மெத்தையாக
உனக்கு மற்றுமொருதாயாக
காத்து நிற்பேன்
என் மகளே மருமகளே
என்னை ஆளப்பிறந்தவளே
என் உயிரில் கலந்த கருவே
என் வாழ்வின் உயிர்த்தீ நீயடி.
மீண்டு வா மகனே
மீண்டும் வா
மரணத்தின் வாசலில்
நாட்டின் துயர் போக்க
மக்களின் உயிர் காக்க
என்னை துறந்து காவல் நிற்க
சென்றவனே என் மகனே
என்று வருவாயோ
வரவேதான் மாட்டாயோ
என கலங்கி அழுத விழிகளுடன்
ஆயிரம் கண்ணுடன்
வாயிலை பார்த்து நிற்கிறேன்
தாய்நாட்டின் கடமை முடிந்தபின்
இந்த தாயின் கடமை காக்க சீக்கிரம் வா...
No comments:
Post a Comment