காதல் - சில கிறுக்கல்கள்
கனவிருக்கு நெஞ்சுக்குள்ள
கண்ணீர் இருக்கு கண்ணுக்குள்ள
உன் நினைவிருக்கு மனசுக்குள்ள
நான் இருக்கேனா உனக்குள்ள
தாவரமாய் நான் படர்ந்திருக்க
மழைநீராய் அன்பை நீ பொழிந்திருக்க
கொடியாய் நான் மேலே உயர்ந்திட
என்கொழுகொம்பாய் நீ தாங்கிட மாட்டாயோ
பொழுதெல்லாம் உன் நினவு
இரவெல்லாம் உன் கனவு
வாழ்வெல்லாம் உன் உறவு - இனி
நமக்குள் ஏது பிரிவு
வெளியே வெண்பனி உறைந்திருக்க...
உள்ளே உன் அன்பு நிறைந்திருக்க...
கையோடு கைகோர்த்து நாம் நடந்திருக்க...
காலம் இப்படியே இருந்தால் மகிழ்வேனே என நான் களித்திருக்க...
அதே கணம் நீ என்னை கண்டு அதை ஆமோதிக்க
வெண்பனிதான் இனிதே சிரித்திடுதே.
பார்தேனா உன்னை... காதல்
சொன்னேனா உன்னிடம்... கண்ணால்
கலகம் செய்தவளே...மோதல்
கொண்டேனா உன்னிடம்... ஆயினும்
என்னவளாக ஆனவளே...காதலிக்கிறேனடீ
என்னை பித்தனாக்கினாயடீ சகியே
இதழ்தொட்ட கள்வனே
நீ மலரிடம் தேனுண்ணும் வண்டா... அல்லாது
இதழில் கவி எழுதும் கவிஞனா
காற்றும்கூட புகக் கூடாது நமக்குள் என்றேன்
நீயே என் சுவாசமுமாவாய் என நான் நினைக்கவில்லை
வருவேனோ நான் என பார்திருந்தாயோ
வந்த பின்னும் என்னை காண மாட்டாயோ
விழியோடு விழி கலக்க மாட்டாயோ
சிப்பி இதழ் வாய் திறந்துதான் ஒரு சொல் பேசமாட்டாயோ
வண்ண மலரே தேன் முத்தம் ஒன்றை தாராயோ
கோபம் என்னவோ அதையும்தான் சொல்லிடாயோ
உன் மகிழ்வுக்காக உன்னுடன் ஓடி வந்தேன்
தாய் தந்தையின் இகழ்வுக்கு ஆளாக்கினாய்
காலமெல்லாம் துணை இருப்பாய் என நம்பி வந்தேன்
நீயோ பசி தீர்ந்ததும் பறந்திட்ட கிளியானாய்
கதறிட நாதியில்லை
சென்றிட திக்கில்லை
பறந்திட சிறகில்லை
இறந்திட துணிவில்லை
வாழ்ந்திட வழியில்லை
காதலிக்கிறேன் என்றேன்...
தலை கவிழ்ந்தாய்
நீயும் என்னை காதலிக்கிறாயா என்றேன்...
கண்களை மூடினாய்
என் காதலை கேட்டு துவண்டாயா...
கோபம் கொண்டாயா...
அழுகிறாயா ...சிரிக்கிறாயா...
என் கேள்விக்கென்ன பதில் என்றேன்
மௌனமே என்றாய்
காதல் இதுதானோ என்று வியக்கிறேன்
உன்னை நினைத்தால் உள்ளம் சிலிர்கிறது
உன்னை எண்ணி உண்டால் கடுக்காயும் இனிக்கிறது
உன்னை நீங்கினால் நெஞ்சம் தவிக்கிறது
உன்னை கண்டால் உள்ளம் பூரிக்கிறது
உன்னை தீண்டினால் மனசு நிறைகிறது
நீ அழுதால் நான் துவள்கிறேன்
நீ சிரித்தால் நான் சிரிக்கிறேன்
இது காதலா வியக்கிறேன்...
என் காதலை சொன்னேன்
வெட்கி நின்றாய்
உன் காதலை கேட்டேன்
சிவந்து போனாய்
உன் கன்னச் சிவப்பில் என் மதி மயங்குதடி.
உன் கள்ளச் சிரிப்பில் என் சிந்தை சிதருதடி
வாழ்வினை வெறுத்திருந்தேன்
உன்னை காணும் வரை...
காதலை கசந்திருந்தேன்
உன் அன்பினை உணரும் வரை...
தமிழும் ருசிக்கவில்லை
உன் பேச்சை கேட்கும் வரை...
தேனும் இனிக்கவில்லை
உன் இதழ் சுவைக்கும் வரை ...
விழிகளே வாசலாக உன் இதயத்துள் நுழைந்தேன்
மௌனமே மொழியாக என் காதலை சொன்னேன்
இந்தப்பயணம் முடிவதெப்போது
நீ என்னை வந்து அடைவதெப்போது
பதில் ஒன்று சொல் கண்ணே காத்திருக்கிறேன்...
காதலை சொல்ல துணிவிருந்த உனக்கு
தாலிகட்ட ஏன் துணிவில்லாமல் போனது?
காதலுக்கு பச்சைகொடி காட்ட வேண்டினாயே
கழுத்துக்கு மஞ்சள் கொடி கட்ட தயங்கியது ஏன்
வாழ்நாள் முழுவதும் கூட வருவேன் என்றாயே
இரு நேர் கோடுகள் ஒன்றாக சேர்வதெப்போது
பாதை ஒன்றாகி பயணம் செய்வதெப்போது
விரும்புவதால் விலகுகிறேன்
உன்னை விலகிச் செல்கிறேன்
நீ நன்றாக வாழ நீங்கிச்செல்கிறேன்
என்னை விரும்பும் நீ என்றென்றும்
நலம் வாழ வாழ்த்துகிறேன்...
வைரத்தூவல்களாக விழும் பனித்துளியை நீ ரசிக்க,
உன் கண்ணில் தெரியும் வைர மின்னலை நான் ரசிக்கிறேன்
நீ காணும் காட்சிகள் யாவும் நானாக இருக்க ஆசை
நீ பேசும் மொழிகள் யாவும் எனக்காக இருக்க ஆசை
உன்னை நான் காணும்போது
என்னை நீ காணாது
விண்ணை நீ பார்கின்றாயே
கண்கள் கலப்பது எப்போது
காதல் பரிமாறுவது எவ்வாறு...
விழியால் மொழி பேசி என்னை கொள்ளை கொண்டாய்
என் மனதினில் வந்தமர்ந்து என்னை ஆட்கொண்டாய்
எனக்கு எல்லாமுமாக நீயே இருந்தாய்... ஆனால்
இப்போதோ என்னை கண்கொண்டும் காண சகிப்பதில்லை,
என் வாய் மொழி கேட்கவும் ஆசை இல்லை
ஒரு அன்பு வார்த்தையுமில்லை
ஆசை அணைப்புமில்லை
உன் ஒதுக்கத்தினால்
என்னை கொல்லாமல் கொல்கின்றாய்...
போதுமடா...இப்பிறப்பில்
உன் அன்பு ஒன்று போதுமடா
உன் ஆசை மொழி கேட்டால் இனிக்குதடா
உன் அணைப்பில் உடல் குறுகுதடா
உன் அரவணைப்பில் நெஞ்சம் உருகுதடா
என்றும் உன்னவளாகவே இருக்க ஆசையடா
ஆருயிரே...
நீயும் ஒரு மலரே
என் கைகளில் மாலையாக சாய்ந்தவளே
மலரை போல மென்மையானவளே
கலங்காதே நீக்குவேன் உன் துன்பம் எல்லாம்
தாங்கி நிற்பேன் துணையாக காலமெல்லாம்
ஓரக்கண்ணால் நீ பார்க்கையிலே மச்சான்
நான் சிவந்து போகிறேனே...
ஓரடி நீ முன்ன வெச்சா மச்சான்
பத்தடி நான் பின்ன வெக்கிறேனே...
பரிசம்தான் நீ போடும் முன்னே மச்சான்
முந்தானைய ஏன் பிடிக்கிறே
கிணத்து தண்ணிய தான் மச்சான்
ஆத்துவெள்ளம் கொண்டு போகுமோ
செல்வான் என்னைவிட்டு... சென்றுவிடுவான்
என ஒரு நாளும் நான் நினைக்கவில்லையடி சகியே
கண்ணாலும் காணவில்லையே
வாய் பேச்சும் கேட்கவில்லையடி சகியே
எங்குகாணினும் அவன் முகமே
என் உள்ளும் அவன் குரலே ஒலிக்குதடி சகியே
காணாமல் தவிக்கிறேன்... இனி
ஒரு நொடியும் உயிர் வாழ்கிலேன் என
ஒரு வார்த்தைதான் கூறி வருவாயோடி சகியே
செய்வாயா எனக்காக ஒன்றே ஒன்று
வருவாயா என் மனம் மலர்ந்து மகிழ
சென்றாயாம் என்னைவிட்டு... சொல்கிறார்கள்
நீயே நானாக நானே நீயாக இருக்கையில்
நீ எப்படி செல்வாய்
என்னைவிட்டு எப்படி பிரிவாய்... பிதற்றுகிறார்கள்
உன் உயிரே நானல்லவா
என் சுவாசமே நீயல்லவா
இதில் பிரிவேது ஊடல் ஏது...பேசுகிறார்கள்
அறியாமையில் பேசுகிறார்கள்...
படைத்தவன் குறும்புக்காரன்....
என்னையும் படைத்து
என்னுள் உன்னை வைத்து....
எனக்காக உன்னையும் படைத்து
உன்னுள் என்னையும் வைத்து...
கண்ணில் இருந்து உன்னை மறைத்து
உன்னைத் தேடி என்னை அழ வைத்து
கண்ணாமூச்சி ஆடுகிறான்
அந்த குறும்புக்காரன்...
விழியோடுவிழி சேர
முகத்தோடு முகம் உரச
இதழோடு இதழ் இணைய
உடலோடு உடல் இழைய
மனதோடு மனம் கலக்க
பிரிய மனமின்றி
நான் பிரியா விடை தர
என்மனமும் தான் கலங்குகிறதே
என்னை விட்டுப் பிரியாதே என்னுயிரே...
உன்பிரிவால் வாடுகிறேன்
உன் நினைவால் வாழுகிறேன்
உன்னை அன்றி வேறு உறவில்லை
உன்னை பிரிந்தொரு வாழ்வில்லை
உன் ஒற்றை பார்வையில் என்னை தொலைத்தேனடா
உன் ஒரு வார்த்தையில் சொக்கி போனேனடா
உன் அணைப்பில் கரைந்தேனடா
உன் ஒரு வார்த்தை என்னை கொன்றே விட்டதேடா...
மறந்துவிடு என்றாயேடா...
மறக்குமா நெஞ்சம்...
கலங்குதேஇதயம்
தவிக்குதேமனம்
ஏனடா...
கண்ணாளனே உன்னை கரம் பிடித்தே
ஏழு அடிகள் நடந்தேன்
ஏழு ஜென்மங்கள் வாழ துடித்தேன்
இன்பத்திலும் துன்பத்திலும்
பிடித்த கரம் விடாதே
உன்னில் பாதி நான் என்பதை மறவாதே
உன் நிழலாக நான் துணையிருப்பேன்
உன் மனதினில் என்றும் குடியிருப்பேன்
மாறிவிட்டாய்...என் சகலமுமாக
என் மனதிற்கு இனியவனாக
எனக்காக எதையும் செய்யக்கூடியவனாக
என் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்
பூர்த்தி செய்பவனாக
மொத்தத்தில் எனக்காக அளவெடுத்து
தைத்த சட்டையைப்போல ஒன்றி போனாய்
மழைமேகம் கருக்க
வான் தூறல் சிலிர்க்க
ஊத காற்று விறைக்க
இள மாலைநேரத்தில்
உன் கையோடு கை கோர்த்து
உன் அணைப்பின் கதகதப்பில்
மழை நனைத்த வீதியிலே
உலா போகவே
உள்ளம் நாடுதே
கற்பனையே தூரிகையாய்
கனவுகளே வண்ணங்களாய்
எண்ணங்களை குழைத்து
என் மன வானில்
நான் வரைந்திட்ட அழகிய ஓவியம் நீ
இதென்ன கோபமோ
ஏனிந்த மௌனமோ
நான் செய்த பிழைதான் என்னமோ
சோலை பசுங்கிளியே
வண்ணமலர் வண்டிசையே
தேன் சிந்தும் மலர் கொடியே
உன் கோபத்தை தாங்குவேன்
உன் மௌனத்தை தாங்கும் சக்தி இல்லையே
நெருப்பாக நீ கொதித்தால்
நீராக நான் அணைக்கவா
தள்ளி நீ இருந்தால்
நான் உள்ளே வருந்தவா
நம்மிடையே இந்ததூரம்
உன் விலகல் தந்த பாரம்
என் உள்ளக் கலக்கம்
இன்னும் எத்தனை நேரம்
வார்த்தைகளின்றி கண்ணால் பேசினாய்
சொல்லாத வார்த்தையிலே காதல் சொன்னாய்
என் நெஞ்சோடு நெஞ்சாக கலந்து போனாய்
செம்புலபெயல் நீர் போல
அன்புடைய நெஞ்சம் தான் கலந்தாய்
இன்று ஏனடி என்னை விட்டுச் சென்றாய்
என்னையே மறந்தாயோ
என்காதலையே துறந்தாயோ
வேறொருவனை மணந்தாயோ
காற்றோடு கலந்தாயோ
பதில் ஒன்று சொல்லாயோ
யுகங்கள் ஆகின்றன உன்னை காணாமல்....
என்ன நேற்று மாலை தான் பார்த்தோமா... என்ன இப்படி
ஓர் இரவே யுகமானால்...
என்ன என் நிலை நீ என்னைவிட்டு பிரிந்தால்
காதல்கொண்டேன்
என் வாழ்விலும் நீ
என் சாவிலும் நீ
உடன் இருக்க ஆசைகொண்டேன்
வாழ்க்கை எனும் பாதையில்
என்னோடு கை கோர்த்து
நீ நடக்ககேட்டேன்
உன் முன் மண்டியிட்டேன்
நீ சம்மதித்தால் மாலையிடுவேன்
நீ என் எஜமானி தான்
உன் கண் பார்வை இடும் ஆணையை
நிறைவேற்ற காத்திருக்கும் சேவகன் நான்
நீ அன்னையாக என்னை தாலாட்ட
உன்னிடம் சேயாக மாறி போனேன் நான்
நீ கண் மலரும் நேரமட்டும் அல்லாமல்
கண் அமரும் நேரமும் கூட இமையாக காப்பேன் நான்
என்னை பிணைத்து வைத்திருக்கிறாய்
உன் அன்பெனும் பிடியில்
என் கரம் பிடிப்பாய் என நான் காத்திருந்தேன்
உன் காதல் சொல்வாய் என பார்த்திருந்தேன்
காலம்தான் கனிய காத்திருந்தாயோ
என் பதிலை நினைத்து பயந்திருந்தாயோ
காலமும் நேரமும் காத்திருக்காது அன்பே
இதோ நானே சொல்லிவிட்டேன் என் மனதை
பிடித்துவிட்டேன் உன் கையை
இனியானும் சொல்லிவிடு ஒருவார்த்தை
காலமெல்லாம் துணையிருப்பேன் என்று
உன் கைகுட்டையாக இருக்க ஆசை
எந்நேரமும் உன் கைகளுக்குள் அடங்கி இருக்க ஆசை
அவ்வப்போது உன் முகம் வருட ஆசை
பாதுகாப்பாக உன் சட்டை பையில் ஒளிந்திருக்க ஆசை
அதன் ஓரம் தைத்த ரோஜாவாக என் இதயம் இருக்க ஆசை
நீ இதழ் ஒற்றிட உன் மீசை குத்திட சிலிர்த்திடத்தான் ஆசை
உன் கைக்குட்டையாக இருக்க ஆசை
காதல்கொண்டேன்
என்னை இழந்தேன்
உன்னில் கலந்தேன்
தன்னை மறந்தேன்
கருவில் சுமந்தேன்
பேரின்பம் பெற்றேன்
நான் அந்த சகுந்தலையா அறியேன்
நீயோ என்னையே மறந்தாய்
என் உறவை துறந்தாய்
பிள்ளையை மறுத்தாய்
நீ துஷ்யந்தன்தானோ
எனக்கு மகிழ்ச்சியே
நீ துஷ்யந்தனாக இருக்கும் வரை
நீ துச்சாதனன் ஆகாத வரை
நீ ராமனாய் இருக்கும் வரை
நீ கிருஷ்ணனாக ஆகாத வரை
நான் கண்ட காட்சியை நீயும் காண
நான் ரசித்ததை நீயும் ரசிக்க
இந்த நிலமும் அந்த வானும்
நம் காதலுக்கு சாட்சியாக
இளம் காற்றும் சுடும் வெய்யிலும்
நமக்கு வாழ்த்துகளாக
அன்பே பிரதானமாக கொண்டு
நீ என்னை மாலையிடுவதாக
கனா கண்டேன் தோழனே...
அந்த வானத்தை போல உயர்ந்ததா உன் காதல்
அந்த ஆகாயம் போல விரிந்ததா உன் அன்பு
சிரிக்கும் சூரியனை போல வீரியமானதா உன் நட்பு
சிலிர்க்கும் காற்றினை போன்றதா உன் அரவணைப்பு
வித்தியாசமாய் இருக்கிறாய்...
யாருமே சீண்டாத என்னை
உனக்கு ஏன் பிடித்துப்போனது...
யாருமே சகிக்காத என் முகம்
உனக்கு ஏன் அழகாகத் தோன்றியது...
யாருக்குமே கண் தெரியாத என் அக அழகு
உன் கண்ணில் எப்படி பட்டது...
எவருமே பாராட்டாத என் குரலினை
குயிலாக நீ கருதியது எப்படி...
ஒரு வேளை பிரம்மன் எனக்காக படைத்திட்ட
என்னவனோ நீ... உன்னவளோ நான்...
உன் காதலில் குளிர்ந்தேன்
உன் அன்பினில் களித்தேன்
உன் மார்பினில் துவண்டேன்
உன் இதழ் சுவைக்க கிளர்ந்தேன்
மன்னவனே எங்கிருந்தாய்
இவ்வளவு நாட்களும் நானறியேன்
மறந்துதான் போனேன்
நான் இன்னொரு வீட்டில் பிறந்தவள் என்று
அன்னை தந்தையிடம் வளர்ந்தவள் அன்று
சுற்றமும் நட்பும் பல உண்டு என்று
நீ செய்த மாயையால்
உன் அன்பின் பரிமாணத்தால்
நான் என்னையும் கூட மறந்துதான் போனேன்
எல்லாமே நீயாகி போனேன்
நான் கொண்ட காதல்
கண்ணில் துவங்கவில்லை
மனதில் துவங்கியது
பேசி அறியவில்லை
உள்ளத்த்தில் அறிந்தது
தவித்து பிறந்ததில்லை
சிந்தித்து பிறந்தது
பச்சை கதிரு சமஞ்சு நிக்குதடி கண்ணம்மா,
வெக்கப்பட்டு வளைஞ்சு நிக்குதடி பொன்னம்மா
கதிரறுக்க விளைஞ்சு நிக்கும் செல்லம்மா
உன்னை பரிசம் போட அன்று வருவேன் என் கண்ணம்மா
பச்சை வயல் வரப்பிலதான்
நீ அசைஞ்சு நடந்துவருகிறடி
என் நெஞ்சம் தான் குலுங்குதடி
உள்ளம் கள்வெறி கொள்ளுதடி
ஆசைவெறி ஏறுதடி
கொண்ட மரியாதைதான் தடுக்குதடி
உன்னை என் கை அணைப்பில் வைப்பேனடி
கட்டி முத்தம் தருவேனடி
பரிசம் போட்டுதான் விரைவில் கட்டுவேனடி
அதன் பின் நம்மை தடுப்பார் யாரடி
உன்னில் பாதியாய் மாறியிருப்பேன்
நெஞ்சில் உன்னை தாயாய் தாங்கி நிற்பேன்
அன்புத் தோழியாய் தோள் கொடுப்பேன்
குறும்பு சகோதரியாய் துள்ளித் திரிவேன்
கைகொடுக்கும் மந்திரியாய் சொல்லி வைப்பேன்
உன் கை பிள்ளையாய் தவழ்ந்திருப்பேன்
தாசியாய் உன்னை காதலிப்பேன்
அனைத்துமாகி எனக்கு நீ இருந்தால்
காலமெல்லாம் நான் உன்னில் இருப்பேன்
வந்துவிடு உயிரே
உன்னை நினைத்து நினைத்து
நான் மாய்ந்து போகும் முன் வந்துவிடு உயிரே
பாலும் கசந்தது படுக்கையும் நொந்தது
வளையலும் கழண்டது இடையும் நெகிழ்ந்தது
அலங்கரிக்க ஆசையில்லை
அழுது துடிக்க நேரம் போதவில்லை
பொட்டிட்டால் உன் நினைவு
பூச் சூடினால் உன் வாசம்
தென்றல் தீண்டினால் உன் சுவாசம்
அனல் மேல் புழுவாய துடிக்கிறேன் நெஞ்சே
மேலும் தவிக்க விடாமல் வந்துவிடு
நீயின்றி நானென்றும் இல்லையடி என்றாயே
இந்த ஒரு சொல் போதுமடா
உனக்காக காத்திருப்பேன் காலமெல்லாம்
வாழ்ந்திருப்பேன் உன் நினைவுகளோடு நாளெல்லாம்
பொறுத்திருப்பேன் மனதின் வலியை பொழுதெல்லாம்
நீ கடமை முடித்து வரும் நாளை
ஆவலுடன் எதிர்பார்ப்பேன்
கலக்கம் வேண்டாம் என் தலைவா
பார்வை கொண்டு என்னை வென்றவனே
பேசாமலேயே என்னை கொண்டவனே
என் மனதை ஆண்டவனே
என் கணவனே கண்ணாளா
மடி மீது உறங்கினாயோ கண்ணா
உன்னை அன்னையாய் தாங்குவேன் நானே
உன் முகம் கண்டு நான் மயங்க
என் மடி மீது நீ கண்ணுறங்க
காதலாகி கசிந்துருகினேன்
காதல்கதை எழுதுவோரும் வியக்கும் வண்ணம்
ஒருவனுக்கு ஒருத்தியாய் மனமொத்து
வாழ்ந்திட எண்ணம்
நீ அருகில் இருக்கையில்
என்னை எந்த நஞ்சு அண்டும்
நீயே தருவாயோ நானே தருவேனோ
தரவும் பெறவும் செழித்து வாழ்ந்து
நல்லதொரு இல்லறம் செய்வோம்
பார்த்திருப்பேன் நீ வரும் வழி மேல்
விழி வைத்து காத்திருப்பேன்
சமைத்திருப்பேன் உன் ருசி அறிந்து
உனக்காக பரிமாற தவித்திருப்பேன்
சகித்திருப்பேன் பொறுமையாக நீவர
நேரமாகினும் பொறுத்திருப்பேன்
வந்த நொடி என்னை அள்ளி கையில் எடுத்து
நீ கொஞ்ச திளைத்திருப்பேன்
உன் ஆசை பேச்சுகளை எண்ணி களித்திருப்பேன்
குடியிருப்பேன் நான் குடிசையிலும்
மாட மாளிகை கூட கோபுரங்கள் வேண்டாம்
உன்மனதில் ஒரு சிறு இடம் கொடு போதும்
மகிழ்ச்சியாய் வாசம் செய்வேன் காலமெல்லாம்
வெட்கம் வந்ததே உன்னை காண்கையில்
கன்னம் சிவந்ததே உன்னை நினைக்கையில்
உடல் சிலிர்த்ததே உன் தொடுகையில்
உள்ளம் சிலிர்த்ததே உன் வாய் மொழியில்
வித விதமாக எழுதி பார்த்துக்கொண்டேன்
என் பெயரை உன் பெயருடன் இணைத்து
சிலபலவாக சொல்லி பார்த்துக்கொண்டேன்
உன் பெயரை இனிக்கிறதே என் நினைத்து
மயக்குவது ஏனடி
ஓரவிழி பார்வையால் என்னை
வீழ்த்துவது ஏனடி
வாய் பேசாமலே கண்ணால்
கொல்வதும் ஏனடி
எட்ட இருந்தே இம்சிப்பதும் ஏனடி
கிட்டே வந்து ஒரு
ஆசைமொழி சொல்லடி
சகி ஈரெழுத்து சொல் தான்...
ஆனால் ஈரேழுலக சுகமும் தருகிறது
அதை நீ உச்சரிக்கும்போது
அந்தநிலவு சாட்சி
இந்த மலரும் சாட்சி
வீசும் தென்றலும் சாட்சி
பேசும் நம் மனம்சாட்சி
பெற்றோரை துறந்து
வீட்டை மறந்து
ஓடி வந்து
இங்கே கிடந்து
கைபிடித்த உன்னை
கைவிடேன் என்றும்
உன் கையணைப்பில் நான்
என் சகலமும் நீ
காற்றும் நிலவும்
வானமும் பூமியும்
நம் காதலுக்குசாட்சி
காதலில் திளைத்து பாசுரம் பாடினாள் கோதை
காதலில் பக்தி பரவசமாகி பாடல்கள் பாடினாள் மீரா
காதலில் கசிந்துருகி அவனே சர்வமுமானாள் ராதா
காதலில் வென்றுஅவனை அடைந்தாள் ருக்மிணி
அவனோ அனைவருக்கும் மனம் மயக்கும் கண்ணனே
கண்களில் கனவு...
கன்னத்தில் சிவப்பு...
முகத்தில் நாணம்...
உதட்டில் மடிப்பு...
அழகுக்கு அழகு...
கன்னியவள்
குலமகள் ஆனாள்!
கண்ணாடியில் நான் என்னைக் காண...
நீ கண் முன்னே தெரியும் மாயம் என்னவோ!
என் நிழலும் நினைவும் நீயே தானோ!!
இயங்குகிறது என் இதயம்
உன்னை நினைத்து
கடக்குது காலம்
நீ வரும் வேளையை எதிர்பார்த்து
கலங்குது நெஞ்சம்
அந்நாள் வருமா கை கூடுமா என மலைத்து
தெளியுது கொஞ்சம்
உன் உறுதியான ஒரு சொல் கேட்டு
மன்னவன் வருவானோடி
மலர்சூட தருவானோடி
அவனுடன் ஏழடி நடப்பெனோடி
அவன் நெஞ்சணையில் பள்ளி கொள்வேனோடி
காத்திருப்பேன் காலமெல்லாம்
வேண்டாத மனைவி வேண்டியவள் ஆக
குடி மறந்து அவன் குடிமகனாக ஆக
சொரணை கேட்ட அவன் கருணை நிறைந்தவன் ஆக
கட்டிய பெற்ற பொறுப்புகளைஅவன் உணர்ந்தவன் ஆக
பொறுமையென்னும் நகை அணிந்து பொறுத்திருப்பேன்
என் சிசுவின் தாயாகும் முன்
என் மடி மீது சேயானாயோ...
என் கழுத்தில் விழுந்த
பொன்வண்ண மாலையோ...
சிற்பி செதுக்கிய
சந்தன சிலையோ...
நீயாகி போனாய்
நான் பேசும் மொழியும்
நான் கேட்கும் சொல்லும்
நான் காணும் காட்சிகளும்
நான் நினைக்கும் சிந்தனைகளும்
நீயே என
எனக்குள் யாதுமாகி நின்றாய்
ஆனால் உனக்குள் நான்... ?
என்பதனால்
நீ என ஒன்று உண்டு என்பதனால்
நான் என்பது ஒன்று இங்கு உண்டு
அதனால் நான் என்பதா
நீ என்பதா
நீ வேறு நான் வேறு என உள்ளதா
நீ இல்லாமல் இனி நான் என்பது ஏதடா
காண நேர்ந்தால்... உன் பெயரை
எங்கேனும் காண நேர்ந்தால்
உள்ளம் துள்ளுது
உச்சரிக்கும்போது உதடு இனிக்குது
காணாதபோது... உன்முகத்தை
காணாதபோது உள்ளம் பரபரக்குது
நெஞ்சம் துடிக்குது
நினைவலைகளில் நெஞ்சம் கனக்குது
சொர்கமாக இருந்தாலும்
எனக்கு அது நரகம்தான்
அங்கு நீ என்னுடன் இல்லாவிடில்
நீ என்னவன் என நினைத்தேன்
நீ தன்னலம் கருதினாய்
நீ என் கைத்தலம் பற்றுவாய் என எண்ணினேன்
நீ கைவிடலில் தேர்ந்தாய்
நீ என் எதிர்காலம் என மகிழ்ந்திருந்தேன்
நீ என்னை உன் கடந்த காலமாக்கினாய்
உன் நினைவே என் உயிருக்கு உணவு
உன் சொல்லே என் காதுக்கு கானம்
உன் பார்வையே என் மனதுக்கு வரம்
என் வாழ்ந்திருந்தேன்
உன் பிரிவே எனக்கு யமன்
என உணர்த்திவிட்டாய்
என் வாழ்க்கையல்லவோ இது
நீ விளையாடும் பொம்மை அல்லவே இது
என் மனதை பந்தாட இது உன் கால்பந்தல்ல
நீ விட்டெறிந்து விளையாட நான் உன் கைபந்துமல்ல
பாஞ்சாலியை பகடை காயாக உருட்டியது அந்தக் காலம்
பாய்ந்து வந்து உன் வஞ்சகத்தை அழித்திடுவது இந்தக் காலம்
கனவிருக்கு நெஞ்சுக்குள்ள
கண்ணீர் இருக்கு கண்ணுக்குள்ள
உன் நினைவிருக்கு மனசுக்குள்ள
நான் இருக்கேனா உனக்குள்ள
தாவரமாய் நான் படர்ந்திருக்க
மழைநீராய் அன்பை நீ பொழிந்திருக்க
கொடியாய் நான் மேலே உயர்ந்திட
என்கொழுகொம்பாய் நீ தாங்கிட மாட்டாயோ
பொழுதெல்லாம் உன் நினவு
இரவெல்லாம் உன் கனவு
வாழ்வெல்லாம் உன் உறவு - இனி
நமக்குள் ஏது பிரிவு
வெளியே வெண்பனி உறைந்திருக்க...
உள்ளே உன் அன்பு நிறைந்திருக்க...
கையோடு கைகோர்த்து நாம் நடந்திருக்க...
காலம் இப்படியே இருந்தால் மகிழ்வேனே என நான் களித்திருக்க...
அதே கணம் நீ என்னை கண்டு அதை ஆமோதிக்க
வெண்பனிதான் இனிதே சிரித்திடுதே.
பார்தேனா உன்னை... காதல்
சொன்னேனா உன்னிடம்... கண்ணால்
கலகம் செய்தவளே...மோதல்
கொண்டேனா உன்னிடம்... ஆயினும்
என்னவளாக ஆனவளே...காதலிக்கிறேனடீ
என்னை பித்தனாக்கினாயடீ சகியே
இதழ்தொட்ட கள்வனே
நீ மலரிடம் தேனுண்ணும் வண்டா... அல்லாது
இதழில் கவி எழுதும் கவிஞனா
காற்றும்கூட புகக் கூடாது நமக்குள் என்றேன்
நீயே என் சுவாசமுமாவாய் என நான் நினைக்கவில்லை
வருவேனோ நான் என பார்திருந்தாயோ
வந்த பின்னும் என்னை காண மாட்டாயோ
விழியோடு விழி கலக்க மாட்டாயோ
சிப்பி இதழ் வாய் திறந்துதான் ஒரு சொல் பேசமாட்டாயோ
வண்ண மலரே தேன் முத்தம் ஒன்றை தாராயோ
கோபம் என்னவோ அதையும்தான் சொல்லிடாயோ
உன் மகிழ்வுக்காக உன்னுடன் ஓடி வந்தேன்
தாய் தந்தையின் இகழ்வுக்கு ஆளாக்கினாய்
காலமெல்லாம் துணை இருப்பாய் என நம்பி வந்தேன்
நீயோ பசி தீர்ந்ததும் பறந்திட்ட கிளியானாய்
கதறிட நாதியில்லை
சென்றிட திக்கில்லை
பறந்திட சிறகில்லை
இறந்திட துணிவில்லை
வாழ்ந்திட வழியில்லை
காதலிக்கிறேன் என்றேன்...
தலை கவிழ்ந்தாய்
நீயும் என்னை காதலிக்கிறாயா என்றேன்...
கண்களை மூடினாய்
என் காதலை கேட்டு துவண்டாயா...
கோபம் கொண்டாயா...
அழுகிறாயா ...சிரிக்கிறாயா...
என் கேள்விக்கென்ன பதில் என்றேன்
மௌனமே என்றாய்
காதல் இதுதானோ என்று வியக்கிறேன்
உன்னை நினைத்தால் உள்ளம் சிலிர்கிறது
உன்னை எண்ணி உண்டால் கடுக்காயும் இனிக்கிறது
உன்னை நீங்கினால் நெஞ்சம் தவிக்கிறது
உன்னை கண்டால் உள்ளம் பூரிக்கிறது
உன்னை தீண்டினால் மனசு நிறைகிறது
நீ அழுதால் நான் துவள்கிறேன்
நீ சிரித்தால் நான் சிரிக்கிறேன்
இது காதலா வியக்கிறேன்...
என் காதலை சொன்னேன்
வெட்கி நின்றாய்
உன் காதலை கேட்டேன்
சிவந்து போனாய்
உன் கன்னச் சிவப்பில் என் மதி மயங்குதடி.
உன் கள்ளச் சிரிப்பில் என் சிந்தை சிதருதடி
வாழ்வினை வெறுத்திருந்தேன்
உன்னை காணும் வரை...
காதலை கசந்திருந்தேன்
உன் அன்பினை உணரும் வரை...
தமிழும் ருசிக்கவில்லை
உன் பேச்சை கேட்கும் வரை...
தேனும் இனிக்கவில்லை
உன் இதழ் சுவைக்கும் வரை ...
விழிகளே வாசலாக உன் இதயத்துள் நுழைந்தேன்
மௌனமே மொழியாக என் காதலை சொன்னேன்
இந்தப்பயணம் முடிவதெப்போது
நீ என்னை வந்து அடைவதெப்போது
பதில் ஒன்று சொல் கண்ணே காத்திருக்கிறேன்...
காதலை சொல்ல துணிவிருந்த உனக்கு
தாலிகட்ட ஏன் துணிவில்லாமல் போனது?
காதலுக்கு பச்சைகொடி காட்ட வேண்டினாயே
கழுத்துக்கு மஞ்சள் கொடி கட்ட தயங்கியது ஏன்
வாழ்நாள் முழுவதும் கூட வருவேன் என்றாயே
இரு நேர் கோடுகள் ஒன்றாக சேர்வதெப்போது
பாதை ஒன்றாகி பயணம் செய்வதெப்போது
விரும்புவதால் விலகுகிறேன்
உன்னை விலகிச் செல்கிறேன்
நீ நன்றாக வாழ நீங்கிச்செல்கிறேன்
என்னை விரும்பும் நீ என்றென்றும்
நலம் வாழ வாழ்த்துகிறேன்...
வைரத்தூவல்களாக விழும் பனித்துளியை நீ ரசிக்க,
உன் கண்ணில் தெரியும் வைர மின்னலை நான் ரசிக்கிறேன்
நீ காணும் காட்சிகள் யாவும் நானாக இருக்க ஆசை
நீ பேசும் மொழிகள் யாவும் எனக்காக இருக்க ஆசை
உன்னை நான் காணும்போது
என்னை நீ காணாது
விண்ணை நீ பார்கின்றாயே
கண்கள் கலப்பது எப்போது
காதல் பரிமாறுவது எவ்வாறு...
விழியால் மொழி பேசி என்னை கொள்ளை கொண்டாய்
என் மனதினில் வந்தமர்ந்து என்னை ஆட்கொண்டாய்
எனக்கு எல்லாமுமாக நீயே இருந்தாய்... ஆனால்
இப்போதோ என்னை கண்கொண்டும் காண சகிப்பதில்லை,
என் வாய் மொழி கேட்கவும் ஆசை இல்லை
ஒரு அன்பு வார்த்தையுமில்லை
ஆசை அணைப்புமில்லை
உன் ஒதுக்கத்தினால்
என்னை கொல்லாமல் கொல்கின்றாய்...
போதுமடா...இப்பிறப்பில்
உன் அன்பு ஒன்று போதுமடா
உன் ஆசை மொழி கேட்டால் இனிக்குதடா
உன் அணைப்பில் உடல் குறுகுதடா
உன் அரவணைப்பில் நெஞ்சம் உருகுதடா
என்றும் உன்னவளாகவே இருக்க ஆசையடா
ஆருயிரே...
நீயும் ஒரு மலரே
என் கைகளில் மாலையாக சாய்ந்தவளே
மலரை போல மென்மையானவளே
கலங்காதே நீக்குவேன் உன் துன்பம் எல்லாம்
தாங்கி நிற்பேன் துணையாக காலமெல்லாம்
ஓரக்கண்ணால் நீ பார்க்கையிலே மச்சான்
நான் சிவந்து போகிறேனே...
ஓரடி நீ முன்ன வெச்சா மச்சான்
பத்தடி நான் பின்ன வெக்கிறேனே...
பரிசம்தான் நீ போடும் முன்னே மச்சான்
முந்தானைய ஏன் பிடிக்கிறே
கிணத்து தண்ணிய தான் மச்சான்
ஆத்துவெள்ளம் கொண்டு போகுமோ
செல்வான் என்னைவிட்டு... சென்றுவிடுவான்
என ஒரு நாளும் நான் நினைக்கவில்லையடி சகியே
கண்ணாலும் காணவில்லையே
வாய் பேச்சும் கேட்கவில்லையடி சகியே
எங்குகாணினும் அவன் முகமே
என் உள்ளும் அவன் குரலே ஒலிக்குதடி சகியே
காணாமல் தவிக்கிறேன்... இனி
ஒரு நொடியும் உயிர் வாழ்கிலேன் என
ஒரு வார்த்தைதான் கூறி வருவாயோடி சகியே
செய்வாயா எனக்காக ஒன்றே ஒன்று
வருவாயா என் மனம் மலர்ந்து மகிழ
சென்றாயாம் என்னைவிட்டு... சொல்கிறார்கள்
நீயே நானாக நானே நீயாக இருக்கையில்
நீ எப்படி செல்வாய்
என்னைவிட்டு எப்படி பிரிவாய்... பிதற்றுகிறார்கள்
உன் உயிரே நானல்லவா
என் சுவாசமே நீயல்லவா
இதில் பிரிவேது ஊடல் ஏது...பேசுகிறார்கள்
அறியாமையில் பேசுகிறார்கள்...
படைத்தவன் குறும்புக்காரன்....
என்னையும் படைத்து
என்னுள் உன்னை வைத்து....
எனக்காக உன்னையும் படைத்து
உன்னுள் என்னையும் வைத்து...
கண்ணில் இருந்து உன்னை மறைத்து
உன்னைத் தேடி என்னை அழ வைத்து
கண்ணாமூச்சி ஆடுகிறான்
அந்த குறும்புக்காரன்...
விழியோடுவிழி சேர
முகத்தோடு முகம் உரச
இதழோடு இதழ் இணைய
உடலோடு உடல் இழைய
மனதோடு மனம் கலக்க
பிரிய மனமின்றி
நான் பிரியா விடை தர
என்மனமும் தான் கலங்குகிறதே
என்னை விட்டுப் பிரியாதே என்னுயிரே...
உன்பிரிவால் வாடுகிறேன்
உன் நினைவால் வாழுகிறேன்
உன்னை அன்றி வேறு உறவில்லை
உன்னை பிரிந்தொரு வாழ்வில்லை
உன் ஒற்றை பார்வையில் என்னை தொலைத்தேனடா
உன் ஒரு வார்த்தையில் சொக்கி போனேனடா
உன் அணைப்பில் கரைந்தேனடா
உன் ஒரு வார்த்தை என்னை கொன்றே விட்டதேடா...
மறந்துவிடு என்றாயேடா...
மறக்குமா நெஞ்சம்...
கலங்குதேஇதயம்
தவிக்குதேமனம்
ஏனடா...
கண்ணாளனே உன்னை கரம் பிடித்தே
ஏழு அடிகள் நடந்தேன்
ஏழு ஜென்மங்கள் வாழ துடித்தேன்
இன்பத்திலும் துன்பத்திலும்
பிடித்த கரம் விடாதே
உன்னில் பாதி நான் என்பதை மறவாதே
உன் நிழலாக நான் துணையிருப்பேன்
உன் மனதினில் என்றும் குடியிருப்பேன்
மாறிவிட்டாய்...என் சகலமுமாக
என் மனதிற்கு இனியவனாக
எனக்காக எதையும் செய்யக்கூடியவனாக
என் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்
பூர்த்தி செய்பவனாக
மொத்தத்தில் எனக்காக அளவெடுத்து
தைத்த சட்டையைப்போல ஒன்றி போனாய்
மழைமேகம் கருக்க
வான் தூறல் சிலிர்க்க
ஊத காற்று விறைக்க
இள மாலைநேரத்தில்
உன் கையோடு கை கோர்த்து
உன் அணைப்பின் கதகதப்பில்
மழை நனைத்த வீதியிலே
உலா போகவே
உள்ளம் நாடுதே
கற்பனையே தூரிகையாய்
கனவுகளே வண்ணங்களாய்
எண்ணங்களை குழைத்து
என் மன வானில்
நான் வரைந்திட்ட அழகிய ஓவியம் நீ
இதென்ன கோபமோ
ஏனிந்த மௌனமோ
நான் செய்த பிழைதான் என்னமோ
சோலை பசுங்கிளியே
வண்ணமலர் வண்டிசையே
தேன் சிந்தும் மலர் கொடியே
உன் கோபத்தை தாங்குவேன்
உன் மௌனத்தை தாங்கும் சக்தி இல்லையே
நெருப்பாக நீ கொதித்தால்
நீராக நான் அணைக்கவா
தள்ளி நீ இருந்தால்
நான் உள்ளே வருந்தவா
நம்மிடையே இந்ததூரம்
உன் விலகல் தந்த பாரம்
என் உள்ளக் கலக்கம்
இன்னும் எத்தனை நேரம்
வார்த்தைகளின்றி கண்ணால் பேசினாய்
சொல்லாத வார்த்தையிலே காதல் சொன்னாய்
என் நெஞ்சோடு நெஞ்சாக கலந்து போனாய்
செம்புலபெயல் நீர் போல
அன்புடைய நெஞ்சம் தான் கலந்தாய்
இன்று ஏனடி என்னை விட்டுச் சென்றாய்
என்னையே மறந்தாயோ
என்காதலையே துறந்தாயோ
வேறொருவனை மணந்தாயோ
காற்றோடு கலந்தாயோ
பதில் ஒன்று சொல்லாயோ
யுகங்கள் ஆகின்றன உன்னை காணாமல்....
என்ன நேற்று மாலை தான் பார்த்தோமா... என்ன இப்படி
ஓர் இரவே யுகமானால்...
என்ன என் நிலை நீ என்னைவிட்டு பிரிந்தால்
காதல்கொண்டேன்
என் வாழ்விலும் நீ
என் சாவிலும் நீ
உடன் இருக்க ஆசைகொண்டேன்
வாழ்க்கை எனும் பாதையில்
என்னோடு கை கோர்த்து
நீ நடக்ககேட்டேன்
உன் முன் மண்டியிட்டேன்
நீ சம்மதித்தால் மாலையிடுவேன்
நீ என் எஜமானி தான்
உன் கண் பார்வை இடும் ஆணையை
நிறைவேற்ற காத்திருக்கும் சேவகன் நான்
நீ அன்னையாக என்னை தாலாட்ட
உன்னிடம் சேயாக மாறி போனேன் நான்
நீ கண் மலரும் நேரமட்டும் அல்லாமல்
கண் அமரும் நேரமும் கூட இமையாக காப்பேன் நான்
என்னை பிணைத்து வைத்திருக்கிறாய்
உன் அன்பெனும் பிடியில்
என் கரம் பிடிப்பாய் என நான் காத்திருந்தேன்
உன் காதல் சொல்வாய் என பார்த்திருந்தேன்
காலம்தான் கனிய காத்திருந்தாயோ
என் பதிலை நினைத்து பயந்திருந்தாயோ
காலமும் நேரமும் காத்திருக்காது அன்பே
இதோ நானே சொல்லிவிட்டேன் என் மனதை
பிடித்துவிட்டேன் உன் கையை
இனியானும் சொல்லிவிடு ஒருவார்த்தை
காலமெல்லாம் துணையிருப்பேன் என்று
உன் கைகுட்டையாக இருக்க ஆசை
எந்நேரமும் உன் கைகளுக்குள் அடங்கி இருக்க ஆசை
அவ்வப்போது உன் முகம் வருட ஆசை
பாதுகாப்பாக உன் சட்டை பையில் ஒளிந்திருக்க ஆசை
அதன் ஓரம் தைத்த ரோஜாவாக என் இதயம் இருக்க ஆசை
நீ இதழ் ஒற்றிட உன் மீசை குத்திட சிலிர்த்திடத்தான் ஆசை
உன் கைக்குட்டையாக இருக்க ஆசை
காதல்கொண்டேன்
என்னை இழந்தேன்
உன்னில் கலந்தேன்
தன்னை மறந்தேன்
கருவில் சுமந்தேன்
பேரின்பம் பெற்றேன்
நான் அந்த சகுந்தலையா அறியேன்
நீயோ என்னையே மறந்தாய்
என் உறவை துறந்தாய்
பிள்ளையை மறுத்தாய்
நீ துஷ்யந்தன்தானோ
எனக்கு மகிழ்ச்சியே
நீ துஷ்யந்தனாக இருக்கும் வரை
நீ துச்சாதனன் ஆகாத வரை
நீ ராமனாய் இருக்கும் வரை
நீ கிருஷ்ணனாக ஆகாத வரை
நான் கண்ட காட்சியை நீயும் காண
நான் ரசித்ததை நீயும் ரசிக்க
இந்த நிலமும் அந்த வானும்
நம் காதலுக்கு சாட்சியாக
இளம் காற்றும் சுடும் வெய்யிலும்
நமக்கு வாழ்த்துகளாக
அன்பே பிரதானமாக கொண்டு
நீ என்னை மாலையிடுவதாக
கனா கண்டேன் தோழனே...
அந்த வானத்தை போல உயர்ந்ததா உன் காதல்
அந்த ஆகாயம் போல விரிந்ததா உன் அன்பு
சிரிக்கும் சூரியனை போல வீரியமானதா உன் நட்பு
சிலிர்க்கும் காற்றினை போன்றதா உன் அரவணைப்பு
வித்தியாசமாய் இருக்கிறாய்...
யாருமே சீண்டாத என்னை
உனக்கு ஏன் பிடித்துப்போனது...
யாருமே சகிக்காத என் முகம்
உனக்கு ஏன் அழகாகத் தோன்றியது...
யாருக்குமே கண் தெரியாத என் அக அழகு
உன் கண்ணில் எப்படி பட்டது...
எவருமே பாராட்டாத என் குரலினை
குயிலாக நீ கருதியது எப்படி...
ஒரு வேளை பிரம்மன் எனக்காக படைத்திட்ட
என்னவனோ நீ... உன்னவளோ நான்...
உன் காதலில் குளிர்ந்தேன்
உன் அன்பினில் களித்தேன்
உன் மார்பினில் துவண்டேன்
உன் இதழ் சுவைக்க கிளர்ந்தேன்
மன்னவனே எங்கிருந்தாய்
இவ்வளவு நாட்களும் நானறியேன்
மறந்துதான் போனேன்
நான் இன்னொரு வீட்டில் பிறந்தவள் என்று
அன்னை தந்தையிடம் வளர்ந்தவள் அன்று
சுற்றமும் நட்பும் பல உண்டு என்று
நீ செய்த மாயையால்
உன் அன்பின் பரிமாணத்தால்
நான் என்னையும் கூட மறந்துதான் போனேன்
எல்லாமே நீயாகி போனேன்
நான் கொண்ட காதல்
கண்ணில் துவங்கவில்லை
மனதில் துவங்கியது
பேசி அறியவில்லை
உள்ளத்த்தில் அறிந்தது
தவித்து பிறந்ததில்லை
சிந்தித்து பிறந்தது
பச்சை கதிரு சமஞ்சு நிக்குதடி கண்ணம்மா,
வெக்கப்பட்டு வளைஞ்சு நிக்குதடி பொன்னம்மா
கதிரறுக்க விளைஞ்சு நிக்கும் செல்லம்மா
உன்னை பரிசம் போட அன்று வருவேன் என் கண்ணம்மா
பச்சை வயல் வரப்பிலதான்
நீ அசைஞ்சு நடந்துவருகிறடி
என் நெஞ்சம் தான் குலுங்குதடி
உள்ளம் கள்வெறி கொள்ளுதடி
ஆசைவெறி ஏறுதடி
கொண்ட மரியாதைதான் தடுக்குதடி
உன்னை என் கை அணைப்பில் வைப்பேனடி
கட்டி முத்தம் தருவேனடி
பரிசம் போட்டுதான் விரைவில் கட்டுவேனடி
அதன் பின் நம்மை தடுப்பார் யாரடி
உன்னில் பாதியாய் மாறியிருப்பேன்
நெஞ்சில் உன்னை தாயாய் தாங்கி நிற்பேன்
அன்புத் தோழியாய் தோள் கொடுப்பேன்
குறும்பு சகோதரியாய் துள்ளித் திரிவேன்
கைகொடுக்கும் மந்திரியாய் சொல்லி வைப்பேன்
உன் கை பிள்ளையாய் தவழ்ந்திருப்பேன்
தாசியாய் உன்னை காதலிப்பேன்
அனைத்துமாகி எனக்கு நீ இருந்தால்
காலமெல்லாம் நான் உன்னில் இருப்பேன்
வந்துவிடு உயிரே
உன்னை நினைத்து நினைத்து
நான் மாய்ந்து போகும் முன் வந்துவிடு உயிரே
பாலும் கசந்தது படுக்கையும் நொந்தது
வளையலும் கழண்டது இடையும் நெகிழ்ந்தது
அலங்கரிக்க ஆசையில்லை
அழுது துடிக்க நேரம் போதவில்லை
பொட்டிட்டால் உன் நினைவு
பூச் சூடினால் உன் வாசம்
தென்றல் தீண்டினால் உன் சுவாசம்
அனல் மேல் புழுவாய துடிக்கிறேன் நெஞ்சே
மேலும் தவிக்க விடாமல் வந்துவிடு
நீயின்றி நானென்றும் இல்லையடி என்றாயே
இந்த ஒரு சொல் போதுமடா
உனக்காக காத்திருப்பேன் காலமெல்லாம்
வாழ்ந்திருப்பேன் உன் நினைவுகளோடு நாளெல்லாம்
பொறுத்திருப்பேன் மனதின் வலியை பொழுதெல்லாம்
நீ கடமை முடித்து வரும் நாளை
ஆவலுடன் எதிர்பார்ப்பேன்
கலக்கம் வேண்டாம் என் தலைவா
பார்வை கொண்டு என்னை வென்றவனே
பேசாமலேயே என்னை கொண்டவனே
என் மனதை ஆண்டவனே
என் கணவனே கண்ணாளா
மடி மீது உறங்கினாயோ கண்ணா
உன்னை அன்னையாய் தாங்குவேன் நானே
உன் முகம் கண்டு நான் மயங்க
என் மடி மீது நீ கண்ணுறங்க
காதலாகி கசிந்துருகினேன்
காதல்கதை எழுதுவோரும் வியக்கும் வண்ணம்
ஒருவனுக்கு ஒருத்தியாய் மனமொத்து
வாழ்ந்திட எண்ணம்
நீ அருகில் இருக்கையில்
என்னை எந்த நஞ்சு அண்டும்
நீயே தருவாயோ நானே தருவேனோ
தரவும் பெறவும் செழித்து வாழ்ந்து
நல்லதொரு இல்லறம் செய்வோம்
பார்த்திருப்பேன் நீ வரும் வழி மேல்
விழி வைத்து காத்திருப்பேன்
சமைத்திருப்பேன் உன் ருசி அறிந்து
உனக்காக பரிமாற தவித்திருப்பேன்
சகித்திருப்பேன் பொறுமையாக நீவர
நேரமாகினும் பொறுத்திருப்பேன்
வந்த நொடி என்னை அள்ளி கையில் எடுத்து
நீ கொஞ்ச திளைத்திருப்பேன்
உன் ஆசை பேச்சுகளை எண்ணி களித்திருப்பேன்
குடியிருப்பேன் நான் குடிசையிலும்
மாட மாளிகை கூட கோபுரங்கள் வேண்டாம்
உன்மனதில் ஒரு சிறு இடம் கொடு போதும்
மகிழ்ச்சியாய் வாசம் செய்வேன் காலமெல்லாம்
வெட்கம் வந்ததே உன்னை காண்கையில்
கன்னம் சிவந்ததே உன்னை நினைக்கையில்
உடல் சிலிர்த்ததே உன் தொடுகையில்
உள்ளம் சிலிர்த்ததே உன் வாய் மொழியில்
வித விதமாக எழுதி பார்த்துக்கொண்டேன்
என் பெயரை உன் பெயருடன் இணைத்து
சிலபலவாக சொல்லி பார்த்துக்கொண்டேன்
உன் பெயரை இனிக்கிறதே என் நினைத்து
மயக்குவது ஏனடி
ஓரவிழி பார்வையால் என்னை
வீழ்த்துவது ஏனடி
வாய் பேசாமலே கண்ணால்
கொல்வதும் ஏனடி
எட்ட இருந்தே இம்சிப்பதும் ஏனடி
கிட்டே வந்து ஒரு
ஆசைமொழி சொல்லடி
சகி ஈரெழுத்து சொல் தான்...
ஆனால் ஈரேழுலக சுகமும் தருகிறது
அதை நீ உச்சரிக்கும்போது
அந்தநிலவு சாட்சி
இந்த மலரும் சாட்சி
வீசும் தென்றலும் சாட்சி
பேசும் நம் மனம்சாட்சி
பெற்றோரை துறந்து
வீட்டை மறந்து
ஓடி வந்து
இங்கே கிடந்து
கைபிடித்த உன்னை
கைவிடேன் என்றும்
உன் கையணைப்பில் நான்
என் சகலமும் நீ
காற்றும் நிலவும்
வானமும் பூமியும்
நம் காதலுக்குசாட்சி
காதலில் திளைத்து பாசுரம் பாடினாள் கோதை
காதலில் பக்தி பரவசமாகி பாடல்கள் பாடினாள் மீரா
காதலில் கசிந்துருகி அவனே சர்வமுமானாள் ராதா
காதலில் வென்றுஅவனை அடைந்தாள் ருக்மிணி
அவனோ அனைவருக்கும் மனம் மயக்கும் கண்ணனே
கண்களில் கனவு...
கன்னத்தில் சிவப்பு...
முகத்தில் நாணம்...
உதட்டில் மடிப்பு...
அழகுக்கு அழகு...
கன்னியவள்
குலமகள் ஆனாள்!
கண்ணாடியில் நான் என்னைக் காண...
நீ கண் முன்னே தெரியும் மாயம் என்னவோ!
என் நிழலும் நினைவும் நீயே தானோ!!
இயங்குகிறது என் இதயம்
உன்னை நினைத்து
கடக்குது காலம்
நீ வரும் வேளையை எதிர்பார்த்து
கலங்குது நெஞ்சம்
அந்நாள் வருமா கை கூடுமா என மலைத்து
தெளியுது கொஞ்சம்
உன் உறுதியான ஒரு சொல் கேட்டு
மன்னவன் வருவானோடி
மலர்சூட தருவானோடி
அவனுடன் ஏழடி நடப்பெனோடி
அவன் நெஞ்சணையில் பள்ளி கொள்வேனோடி
காத்திருப்பேன் காலமெல்லாம்
வேண்டாத மனைவி வேண்டியவள் ஆக
குடி மறந்து அவன் குடிமகனாக ஆக
சொரணை கேட்ட அவன் கருணை நிறைந்தவன் ஆக
கட்டிய பெற்ற பொறுப்புகளைஅவன் உணர்ந்தவன் ஆக
பொறுமையென்னும் நகை அணிந்து பொறுத்திருப்பேன்
என் சிசுவின் தாயாகும் முன்
என் மடி மீது சேயானாயோ...
என் கழுத்தில் விழுந்த
பொன்வண்ண மாலையோ...
சிற்பி செதுக்கிய
சந்தன சிலையோ...
நீயாகி போனாய்
நான் பேசும் மொழியும்
நான் கேட்கும் சொல்லும்
நான் காணும் காட்சிகளும்
நான் நினைக்கும் சிந்தனைகளும்
நீயே என
எனக்குள் யாதுமாகி நின்றாய்
ஆனால் உனக்குள் நான்... ?
என்பதனால்
நீ என ஒன்று உண்டு என்பதனால்
நான் என்பது ஒன்று இங்கு உண்டு
அதனால் நான் என்பதா
நீ என்பதா
நீ வேறு நான் வேறு என உள்ளதா
நீ இல்லாமல் இனி நான் என்பது ஏதடா
காண நேர்ந்தால்... உன் பெயரை
எங்கேனும் காண நேர்ந்தால்
உள்ளம் துள்ளுது
உச்சரிக்கும்போது உதடு இனிக்குது
காணாதபோது... உன்முகத்தை
காணாதபோது உள்ளம் பரபரக்குது
நெஞ்சம் துடிக்குது
நினைவலைகளில் நெஞ்சம் கனக்குது
சொர்கமாக இருந்தாலும்
எனக்கு அது நரகம்தான்
அங்கு நீ என்னுடன் இல்லாவிடில்
நீ என்னவன் என நினைத்தேன்
நீ தன்னலம் கருதினாய்
நீ என் கைத்தலம் பற்றுவாய் என எண்ணினேன்
நீ கைவிடலில் தேர்ந்தாய்
நீ என் எதிர்காலம் என மகிழ்ந்திருந்தேன்
நீ என்னை உன் கடந்த காலமாக்கினாய்
உன் நினைவே என் உயிருக்கு உணவு
உன் சொல்லே என் காதுக்கு கானம்
உன் பார்வையே என் மனதுக்கு வரம்
என் வாழ்ந்திருந்தேன்
உன் பிரிவே எனக்கு யமன்
என உணர்த்திவிட்டாய்
என் வாழ்க்கையல்லவோ இது
நீ விளையாடும் பொம்மை அல்லவே இது
என் மனதை பந்தாட இது உன் கால்பந்தல்ல
நீ விட்டெறிந்து விளையாட நான் உன் கைபந்துமல்ல
பாஞ்சாலியை பகடை காயாக உருட்டியது அந்தக் காலம்
பாய்ந்து வந்து உன் வஞ்சகத்தை அழித்திடுவது இந்தக் காலம்
No comments:
Post a Comment